மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவக்கிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகின்றன என்று நம் முன்னோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். பரம்பொருளானவர், ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அதிகாரியாக நியமித்து இருக்கிறார். அதிகாரியாக நியமிக்கப்பட்ட கிரகங்கள், ஒருவர் முன் ஜென்மத்தில் செய்த வினையை அனுசரித்து அதற்குத் தகுந்த பலன்களைத் தத்தம் தசாபுத்திகள் நடக்கும்போது கொடுத்து வருகின்றன.
ஒருவன் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவனா, அவன் தந்தை எப்படிப்பட்டவர், அவர் ஆயுள் எப்படி என்பன போன்ற நுட்பங்களை அவனுடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலை வைத்து அறிந்து சொல்லலாம். அதாவது கிரகங்கள் எல்லாம் நம் உடலில் குடி கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும்.
சூரியன் - (தந்தை) ஆத்மா, எலும்பு
சந்திரன் - (தாய்) மனம், இரத்தம்
செவ்வாய், ராகு - (சகோதரர்கள்) பலம், மஜ்ஜை
புதன் - (தாய்மாமன்) வாக்கு, தோல்
குரு - (புத்திரகாரகன்) ஞானம், தசை, மாமிசம்
சுக்கிரன் - (களத்திரகாரகன்) காமம், இந்திரியம்
சனி, கேது - (ஆயுள்) துக்கம். நரம்புத் தசை
கிரகங்களின் பார்வை
எல்லாக் கிரகங்களும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்கள்.
• சூரியன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.
• சந்திரன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.
• செவ்வாய், தான் இருக்கும் வீட்டிலிருந்து 4,7,8 வீடுகளைப் பார்க்கிற தன்மை உண்டு. (4ம், 8ம் விஷேச பார்வை)
• புதன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.
• குரு தான் இருக்கும் இடத்தில் வீட்டிலிருந்து 5, 7, 9 வீடுகளைப் பார்ப்பார். (5ம், 9ம் விஷேச பார்வை)
• சுக்கிரன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டைப் பார்ப்பார்.
• சனி தான் இருக்கும் இடத்தில் வீட்டிலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். (3ம், 10ம் விஷேச பார்வை)
கிரகங்களின் மார்க்கம்
சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய 7 கிரகங்களும் ராசியைப் பிரதட்சிணமாகச் சுற்றி வருவார்கள். ராகு, கேது கிரகங்கள் எதிர்புறமாகச் சஞ்சாரம் செய்வார்கள்.
கிரகங்களின் ஸ்தலங்கள்
சூரியன் - சூரியனார் கோவில்
சந்திரன் - திங்களூர்
செவ்வாய் - வைத்தீஸ்வரன்
புதன் - திருவெண்காடு
குரு - ஆலங்குடி
சுக்கிரன் - கஞ்சனூர்
சனி - திருநள்ளாறு
ராகு - திருநாகேஸ்வரம்
கேது - கீழ்ப்பெரும்பள்ளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைகான விண்ணப்பம் விநியோகம்

மக்களை மையப்படுத்தியே நிா்வாக முடிவுகள்! இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

சீன இறக்குமதியை சாா்ந்தே இந்திய மருந்து உற்பத்தித் துறை: நீதி ஆயோக்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



