கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மக்களே உஷார்: ஜூன் 18-ல் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசிக்க முடியாதாம்!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 18-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதால், அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

தினமணி

உடுப்பி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜூன் 18-ம் தேதி கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதால், அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைப்பதற்காக குடியரசுத் தலைவர் இன்று பெங்களூரு வருகிறார். இந்நிலையில், இன்று மாலை 5.00 மணியளவில் விழாவில் பங்கேற்றும் அவர், ஜூன் 18-ம் தேதி மாலை 4.00 மணியளவில் கொல்லூர் மூகாம்பிகையைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை தாய் மூகாம்பிகை கோயிலுக்குள் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கோயிலை சுற்றிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.