எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமா?

வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமாகுமா

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 1:02 pm IST

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக, மலைப் பாதையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு, வெள்ளியங்கிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முவைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத் துறை இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று மறுத்துவிட்டது.

பிப்ரவரி 25ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பக்தர்கள் பலியாகியுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு 13 பேரும், 2023ஆம் ஆண்டு 8 பேரும் மலைக்குச் செல்லும் போது பலியாகியுள்ளனர்.

பக்தர்களின் மரணத்தைத் தொடர்ந்து சில வாரங்களக்கு முன்பு, வனத்துறை சில அறிவுறுத்தல்களை வெளியிட்டது. அதில், இதய நோய், நீரிழிவு, கடுமையாக கரோனா பாதித்தவர்கள் போன்ற இணை நோய் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வர வேண்டாம் என்றும், வெள்ளியங்கிரி மலையேற விரும்புவோர், அதற்கு முன்பு ஒரு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியிருந்தது.

Story image

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க, சுகாதாரத் துறை, வெள்ளியங்கிரி மலைப் பாதையில் மருத்துவ முகாம்களை அமைக்கலாம் என்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், அனைத்து நாள்களில் இல்லாவிட்டாலும், கூட்டம் அதிகம் இருக்கும் நாள்களிலாவது மருத்துவ முகாம் அமைக்கலாம் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கோவையின் சுகாதார சேவை மையத்தின் உதவி இயக்குநர் டாக்டர். பி. அருணாவிடம் கேட்டதற்கு, வெள்ளியங்கிரி மலையில் மருத்துவ முகாம் அமைப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் அவர் அளித்த பேட்டியில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஏற்கனவே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கு முன்பு இந்த மருத்துவ முகாமில் உடல்பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மரணமடைந்தவர்கள் அனைவரும் ஒன்று வயதானவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்களாகவே இருந்தனர். மூன்றாவது அல்லது நான்காவது மலையில் மருத்துவ முகாம் அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், மருத்துவக் கருவிகளுடன், ஒரே நாளில் மலையேறி, மருத்துவ முகாம் அமைத்துவிட்டு மீண்டும் அதே நாளில் இறங்கி வருவது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.