திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே, மாலை 3 முதல் 6 மணி வரை மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குப் பிறகு பக்தர்கள் வழக்கம்போல மூலவரை தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.