செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ கோயில் புரத்தில்அமைந்துள்ள ஸ்ரீ வாருவேங்கடே பெருமாள் கோயில் வளாகத்தில் புதிதாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள 108 திவ்யதேச திருத்தலக் கோயில்களுக்கு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்தில் 108 திவ்யதேச எம்பெருமான்களையும் ஒரே தலத்தில் சேவிக்கும் வகையில், தனித்தனி சந்நிதானங்கள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிவுற்றன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு, கடந்த ஒருமாதமாக கோயில் ஸ்தாபகர் புண்ணியக்கோட்டி மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்டோர் திருப்பதி, ஸ்ரீரங்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட 108 வைணவ திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். அந்தந்த கோயில்களில் பூஜைகள் செய்து, ஆகம விதிமுறைகளை அறிந்து அதேபோல் மூல விக்ரகங்கள் உருவாக்கப்பட்டன.
கும்பாபிஷேக தினத்துக்கு முன்பாக, 108 திவ்ய தேச திருக்குடைகள் யாத்திரையானது பல்வேறு பகுதிகள் வழியாக வந்து ஞாயிற்றுக்கிழமை திருவடிசூலம் வந்தடைந்தது. அதனையடுத்து திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர், ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவர் திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், திங்கள்கிழமை காலை யாக சாலை புண்யாஹவாசனம், மஹா சாந்தி ஹோமம் உள்ளிட்டவையும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை விசேஷ ஹோமங்களும், புதன்கிழமை பிம்பசுத்தி திருமஞ்சனம், மகா சந்தி கலச திருமஞ்சனம் உள்ளிட்டவையும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, அனைத்து சந்நிதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில், திருக்கல்யாண உற்சவம், மங்களகிரி புறப்பாடும், இரவு அனுமந்த உற்சவமும் நடைபெற்றது.
விழாவில் பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 51அடி உயர தேவி ஸ்ரீ கருமாரியமனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், லியோ சுந்தரம், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: மாணவர்களுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை!

நூதன விழிப்புணர்வு! தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு 1 கிலோ தக்காளி!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



