சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொடியேற்றம்

நெல்லை மாவட்டம், பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On :6 ஏப்ரல் 2018, 12:33 am IST

நெல்லை மாவட்டம், பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இத்திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
9-ஆம் திருநாளான ஏப். 13-ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி பகல் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவத்தைத் தொடர்ந்து, இரவு 1 மணிக்கு சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தல் முதலியவை நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர் கிருஷ்ணகாந்தன், சிவராஜ், இந்து முன்னணி மாவட்டச் செயலர் பால்மாரியப்பன், பாபநாசம் கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் ரா. நடராஜன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் சத்யசீலன், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.