விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ராயபுரத்தில் விநாயகர் சிலை அம்மனாக உருமாறிய அதிசயம்

சென்னை ராயபுரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் சிலையாக உருமாறி காட்சியளித்ததாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 3:34 pm IST

சென்னை ராயபுரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, அம்மன் சிலையாக உருமாறி காட்சியளித்ததாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

ராயபுரத்தில் குமாரசாமி தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் வீட்டு வாசலில் உள்ள வலம்புரி விநாயகர் சிலை அம்மன் சிலையாக உருமாறியுள்ளதாக தகவல்கள் பரவியது. 

இதனை அப்பகுதியில் இருந்த சிறுவர்கள் பார்த்து பலருக்கு தகவல் பரப்பியுள்ளனர். இதையடுத்து, தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிலையைக் காண திரண்டனர்.

அப்பகுதியில் கூட்டம் அதிகம் கூடியதால் ராயபுரம் காவல்துறையினர் அங்கு வந்த பக்தர்கள் அனைவரையும் வரிசையாகச் செல்லுமாறு அறிவுறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். 

வலம்புரி விநாயகர், அம்மனாக மாறியதை பார்த்த பலரும் தங்களின் செல்போனில் படம் பிடித்தனர். சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். ராயபுரத்தில் உள்ள சேனியம்மன்தான் விநாயகர் சிலையில் இறங்கி இருப்பதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.