சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அற்பாயுள் உள்ளவர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? 

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 11:06 am

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

பாபர்கள் 3, 6, 9, 12-ம் இடத்தில் இருந்தாலும் அற்பாயுளேயாகும். 2-க்குடையவன் ஒன்பதாமிடத்திலும் சனி ஏழிலும் பதினொன்றில் குரு, சுக்கிரன் இருந்தாலும் அற்பாயுளாகும். 

லக்னத்தில் சனி செவ்வாய் இவர்களும், எட்டில் சந்திரனும் 6-ல் குருவும் இருந்தால் அற்பாயுளாகும். லக்னாதி எட்டாமிடத்தில் இருந்தால் அற்பாயுள். 6,8,12-ம் இடத்தில் பாபவரும், லக்னாதிபதி பலமற்று இருந்தால் அற்பாயுளாகும். 

சனி, எட்டுக்குடையவன் இவர்கள் குரூர சஷ்டியம்சத்திலிருந்து பாபருடன் கூடியோ பாபரால் பார்க்கப்பட்டோ இருந்தாலும் அற்பாயுள். பாபர் கேந்திரத்திலிருந்து சுபர் பார்வையைப் பெறாமலும், லக்னாதிபதி பலமற்று இருந்தாலும், இரண்டு பாபர்கள் 12, 2-ம் இடத்தில் இருந்து சுபர் பார்வைப் பெறாமல் இருந்தாலும் அற்பாயுளாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.