எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருமலையில் விசாக சாரதா பீடாதிபதி வழிபாடு

திருமலையில் விசாக சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகள், செவ்வாய்க்கிழமை

News image

சொரூபானந்தேந்திர சுவாமிக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு. 

Updated On :26 டிசம்பர் 2018, 2:27 am IST


திருமலையில் விசாக சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர சுவாமிகள், செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்தார். 
தனது சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பதி தேவஸ்தானத்துக்கும், ஆந்திர அறநிலையத் துறைக்கும் அர்ச்சகர்களின் பணி மற்றும் ஓய்வு உள்ளிட்டவை தொடர்பாக முடிவெடுக்க உரிமையில்லை. அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயதை தேவஸ்தானம் நிர்ணயித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. 
அர்ச்சகர்களின் விஷயத்தில் தேவஸ்தானம் செய்த தவறை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது பாராட்டுக்குரியது. அதேபோல், மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திலும் அர்ச்சகர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம். 
அர்ச்சகர் பணி என்பது அரசு வேலையில்லை. அது ஒரு வம்ச பாரம்பரிய சேவை. அர்ச்சகர்களின் வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்க ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். 
தேவஸ்தானத்தின் நிதியை வீணடிக்கும் வகையில் பல்வேறு நகரங்களில் தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலைக் கட்டி வருகிறது. அதற்கு பதிலாக, மதமாற்றம் நடைபெற்று வரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் அல்லது மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும்.
தேவஸ்தானம் செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுவதால் ஆண்டுதோறும் நடைபெறும் பீடாதிபதிகள் கூட்டத்தை அதிகாரிகள் நடத்துவதில்லை. இதை ஆந்திர அரசும் கண்டுகொள்வதில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.