/

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பல்லக்கு உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. 

News image
Updated On :28 மார்ச் 2018, 5:31 am

தினமணி

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. 

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.

விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. பல்லக்கில் பவனி வந்து, கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். காலை 6.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. 

நாளை காலை திருஞானசம்பந்தர், எலும்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனையொட்டி மாலை வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருக்காட்சி அருளும் நிகழ்ச்சி நடைபெறும். 

மார்ச் 31-ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் புன்னை மரத்தடியில் சிவ வழிபாடும், அன்று மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.