மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பங்குனி உத்திரத்தில் சம்பந்தர் நிகழ்த்திய அதிசயம்! 

பங்குனி உத்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மற்றொரும் கதையும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டாமா?

News image
Updated On :29 மார்ச் 2018, 12:03 pm

பங்குனி உத்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மற்றொரும் கதையும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டாமா?

அது தான் திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்த கதையாகும்! மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரமான சிவபக்தர். அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். ஞானசம்பந்தர் சுவாமிகளின் மகிமையை அறிந்து அவருக்கு தனது மகளை மனம் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணமாக இருந்தது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது.

ஒருநாள் பூப்பறிப்பதற்காக பூந்தோட்டத்திற்குச் சென்ற பூம்பாவையை பாம்பு தீண்டிவிட, பூம்பாவை இறந்துவிட்டாள். மிகவும் வருத்தமுற்ற சிவநேசர் மகளின் உடலை தகனம் செய்து எலும்மையும் சாம்பலையும் சேமித்து வைத்தார். ஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்திருந்த வேளையில் இதுபற்றி அறிந்தார். அவர் உடனடியாக எலும்பு, சாம்பல் அடங்கிய குடத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தலத்திற்கு கொண்டு வரும்படி சிவநேசரை கேட்டுக்கொண்டார்.

அன்றைய தினம், கபாலீஸ்வரர் உற்சவ தினத்தின் 9-ம் நாள் கபாலீஸ்வரருக்கு திருமண மகோற்சவ தினம். அன்றைய தினம் இறைவனிடம் பூம்பாவைக்காக பதிகம் பாடி உயிர் பெறச் செய்தார். அவர் பதிகம் பாடிய தினம், மகிமை வாய்ந்த பங்குனி உத்திர தினமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.