கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீக்ஷேத்ர சகடபுரம் ஸ்ரீவித்யாபீடத்தில் ஸ்ரீப்ரம்ம கும்பாபிஷேகம்: ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது!

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், கொப்பா தாலுக்காவில் உள்ள ஸ்ரீக்ஷேத்ர சகடபுரத்தில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யாபீடம்.

News image
Updated On :17 ஏப்ரல் 2019, 9:11 am

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், கொப்பா தாலுக்காவில் உள்ள ஸ்ரீக்ஷேத்ர சகடபுரத்தில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யாபீடம். இங்கு, ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

இக்கோயிலில், இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை ஸ்ரீப்ரம்ம கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவின் பகுதிகளாக தேவதா பிரதிஷ்டை, மூலாலய கும்பாபிஷேகம், சஹஸ்ர நாளீகர மஹா கண யாகம், ஸ்ரீ சஹஸ்ர சண்டி யாகம், ஸ்ரீ ஆதிருத்ரம் ஆகியவையும் நடைபெற உள்ளன. 28-ம் தேதி, ஸ்ரீஸ்ரீஆசார்ய மஹா ஸ்வாமிகளால் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பத்து நாள்கள் நடைபெறும் இக்கும்பாபிஷேக விழாவின்போது வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன், பல வகையான ஹோமங்களும் நடைபெறுகின்றன. பக்தர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து இறைவனின் அருளைப் பெற கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு ஸ்ரீகார்யம் எம். சந்திரமௌலீஸ்வரன் - 08265 - 244066, 08265 - 244005.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.