முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

திருமலையில் நாளை ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில் புதன்கிழமை (ஜன.16) அங்கப்பிரதட்சணம் மற்றும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Updated On :15 ஜனவரி 2019, 2:38 am IST


திருமலையில் புதன்கிழமை (ஜன.16) அங்கப்பிரதட்சணம் மற்றும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் புதன்கிழமை பார்வேட்டை உற்சவம், கோதா பரிணய உற்சவம் (ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்) நடைபெற உள்ளது. 
அதனால் அன்று ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அங்கப்பிரதட்சணம், தோமாலை, அர்ச்சனா, சகஸ்ர தீபாலங்கார சேவை, சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 
எனவே, புதன்கிழமை காலை அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக, மத்திய விசாரணை அலுவலகத்தில் வழங்கப்படும் டிக்கெட் செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


உண்டியல் வருமானம் ரூ. 2.49 கோடி
 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் சனிக்கிழமை ரூ. 2.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.