ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை தை உத்திர வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:00 am IST


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பா. பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் தை மாத உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதனால், ஆண்டுதோறும் அதே நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டு தை உத்திர வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது. 
இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதற்காக பக்தர்கள் கேந்திப் பூக்களைத் தவிர மற்ற பூக்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.