பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சந்திர கிரகணம்: ஜூலை 16-ல் ராமநாதசுவாமி கோயிலில் நள்ளிரவு தீர்த்தவாரி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்  ஜூலை16 ஆம் தேதி சந்திர கிரஹணத்தையொட்டி..

News image
Updated On :11 ஜூலை 2019, 5:27 am

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்  ஜூலை 16-ஆம் தேதி சந்திர கிரஹணத்தையொட்டி நள்ளிரவு தீர்த்தவாரி நடைபெறும் என இணை ஆணையர் எஸ்.கல்யாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 1.33 மணி முதல் அதிகாலை 4.32 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுகிறது. இதனையடுத்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 16 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு அன்று நள்ளிரவு 1.33 மணிக்கு தீர்த்தவாரிக்காக சுவாமி புறப்பாடகி, அதிகாலை 3.02 மணிக்கு அக்னி தீர்த்தத்தில், தீர்த்தவாரி நடைபெறும்.]

17 ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோயில்  நடை திறந்து கிரஹணாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அதன் பிறகு ஸ்படிகலிங்க பூஜை, திருவனந்தள் பூஜைகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.