மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நாளை ஆனித் தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ல் நடைபெற உள்ளது.

Published On :

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவுக்கான தேரோட்டம் ஜூலை 14 (நாளை) நடைபெற உள்ளது. 

பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. 

அதனால், திருநெல்வேலி  சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  டவுண் நான்கு ரதவீதிகள் மற்றும் தெற்கு மவுண்ட் ரோடு மற்றும் நயினார்குளம் சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக டவுண் வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அருணகிரி திரையரங்கு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பேருந்துகள் தவிர, இதர வாகனங்கள் சாப்டர் மேல்நிலைப் பள்ளி மற்றும் டவுண் அலங்கார வளைவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நகரம் வரும் பேருந்துகள் அனைத்தும் அருணகிரி திரையரங்கு அருகே பயணிகளை இறக்கிவிட்டு, தாமதம் செய்யாமல் உடனே திரும்ப வேண்டும். தென்காசி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வண்ணார்பேட்டை வழியாக ராமையன்பட்டி, கண்டிகைப்பேரி சாலையைப் பயன்படுத்திபழையபேட்டை சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக பேட்டை சுத்தமல்லி செல்லும் நகரப் பேருந்துகள் கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டையை சென்றடைந்து இணைப்பு சாலையின் மூலம் பேட்டை செல்ல வேண்டும். 

திரும்ப வரும்போது தொண்டர் சன்னதி, சாலியர்தெரு வழியாக தச்சநல்லூர் வரவேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சேரன்மகாதேவி வழியாக சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.

பலத்த பாதுகாப்பு நெல்லையப்பர் கோயில் தேரோட்ட விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.