புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

25-வது நாளில் மஞ்சள் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

அத்திவரதர் தரிசனம் 25-வது நாளான இன்று மஞ்சள் நிறப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் எம்பெருமாள். 

News image
Updated On :25 ஜூலை 2019, 7:13 am

தினமணி

அத்திவரதர் தரிசனம் 25-வது நாளான இன்று மஞ்சள் நிறப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் எம்பெருமாள். 

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்தாண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர். 

அத்திவரதர் பெருவிழாவில் 24 நாள்கள் நிறைவடைந்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. விழாவின் 25-ம் நாளான இன்று மஞ்சள் பட்டுடுத்தி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். 

இன்று காலை முதல் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக வரிசைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.