டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள கேதார்நாத் கோயில் கடந்த 45 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து வருகை புரிந்து தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு சார்தாம் ஆலயங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் ஆறு மாதங்களுக்கு பின்பு வழிபாட்டுக்காக கடந்த மே 9-ம் தேதி திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு 45 நாட்களுக்குள் சுமார் 7.35 லட்சம் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் பிரதமர் மோடி கேதார்நாத் வந்து தரிசனம் செய்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கேதார்நாத் கோயிலுக்குப் பலரும் ஆர்வத்துடன் வரத் துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரை முடிய இன்னும் 5 மாத காலம் உள்ளதால் இந்தாண்டு இறுதிக்குள் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்று பத்ரி-கேதார் கோயில் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


