

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் திருமலை திருப்பதியில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
ஐ.பி.எல் கிரிக்கேட் போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் இன்று காலை திருப்பதி வந்தார். காலை 5 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று பிரசாதம் வழங்கினர்.
ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய சாமி தரிசனம் செய்ய வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அதேபோன்று, கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானைத் தரிசித்துச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.