டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வைத்தீஸ்வரன் கோயிலில் செப்.12-ல் குடமுழுக்கு பணிகள் தொடக்கம்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் செப்டம்பர்..

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:03 am

DIN

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோயிலில் செப்டம்பர் 12-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் மற்றும் இளைய ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் குடமுழுக்கு பணிகள் தொடங்குகின்றன. 

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். 

செவ்வாய் தலமாக விளங்குவதாலும், இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபாடு செய்து வந்தால் தீராத வியாதிகள் தீரும் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.

பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 1998-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின்னர் ஆகமவிதிகளின் படி 12 ஆண்டுகளை கடந்தும் குடமுழுக்கு செய்யாமல் இருந்து வருவது பக்தர்களை வருத்தம் அடைய செய்தது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன்  திருப்பணிகளை தொடங்க தீர்மானித்தனர். 

அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருப்பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தம் நடைபெறவுள்ளது. இதில், தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பு பூஜைகள், யாகங்கள் செய்து குடமுழுக்கு திருப்பணிகளை  தொடங்கி வைக்கவுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் தொடங்கவுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.