“நாசமிலாக் கடகத்தின் மதியுலாவச் சனித்தோன்
நண்ணுபலன் மடவாரை நகைபுரிந்து சயிப்பன்
வீசிவளைந் தேடுவன்அன் புடையன்நண்ப ருடையோன்
வீடதிக மாய்க்கட்டி மேவுவன்மெய் குறளன்
நேசமுறு மனக்கள்ளன் உத்தேச முள்ளான்
நிலையில்லாத் தனம் படைத்தது நீள்நிலத்தில் இருப்பன்
பாசமுடன் அனைவருக்கும் பருத்தகழுத் துளனாம்
பரவுசம உபாயனென வேபகர வேண்டும்.”
- ஜாதக அலங்காரம் சந்திரன் பெருமை கூறப்படுகிறது.
கடக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுது ஜெனனமானவன் அவனது தோற்றத்தையும் குணத்தையும் அழகாகக் கூறப்படுகிறது.
எங்குப்பார்த்தாலும் எல்லா வீட்டிலும் எதாவது பிரச்னைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது உடலில் பெரும் பகுதி எல்லா நோய்க்கும் முடிந்தவரை மருத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் உடலையும் தாண்டி ஒருவித மனம் என்ற சந்திரன் ஓட்டத்திற்கு அனைவரும் பலியாகிவிடுகிறார்கள். இதைப்பற்றி ஆராய்ந்து வெளிவந்தது.
முக்கியக் காரணகர்த்தா ஒருவரே
இதற்கு ஒட்டுமொத்தமான முக்கிய காரணகர்த்தா மனதைச் சுற்றிக்கொண்டு இருக்கும் சந்திரன்.
மனநோயாளியாக மாற்றும் சந்திரன்
மனதை ரிலாக்ஸ் செய்யும் கோவிலும், ஆன்மீக தகவல்கள் மற்றும் மருத்துவ தகவல்கள் நாளை வெளியிடப்படும்.
- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி
Email: vaideeshwra2013@gmail.com
Whatsapp: 8939115647