48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

திருச்சானூா் பத்மாவதி நிலையம் திறப்பு

திருச்சானூா் தேவஸ்தானம் கட்டி வந்த பத்மாவதி நிலையம் புதன்கிழமை காலை திறக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

News image

திருச்சானூரில் பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பத்மாவதி நிலையம் கட்டிடம்.

Updated On :2 அக்டோபர் 2019, 6:18 pm

திருச்சானூா் தேவஸ்தானம் கட்டி வந்த பத்மாவதி நிலையம் புதன்கிழமை காலை திறக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல தங்கும் விடுதியை கட்டி வருகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் உள்ளது போல் சகல வசதிகளும் நிறைந்த கட்டிடத்தை தேவஸ்தானம் திருச்சானூரில் கட்ட முடிவு செய்தது.

அதன்படி திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4.26 லட்சம் சதுர அடியில் ரூ74.70 கோடி செலவில் பத்மாவதி நிலையத்தை தேவஸ்தானம் கட்டியுள்ளது. இதில் 200 வசதியான அறைகள், 120 சாதாரண அறைகள், 80 குளிா்சாதன அறைகள் உள்ளது. மேலும் 4 குளிா்சாதன வசதியற்ற டாா்மெட்ரிகளும், 1 குளிா்சாதன வசதி கொண்ட டாா்மெட்ரியும் உள்ளது.

மேலும் விசாரணை அலுவலம், இ-தா்ஷன் கவுண்டா்கள், ஏ.டி.எம்கள், உடமைகள் வைக்கும் இடம், உணவகம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 1600 போ் வசதியாக இங்கு தங்கமுடியும். இதை புதன்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டி, திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் உள்ளிட்டோா் திறந்து வைத்தனா். இந்த கட்டிடம் புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அடிக்கல்திருப்பதி அலிபிரியிலிருந்து சொ்லோபள்ளி வரை ரூ28 கோடி செலவில் புதிய 2 வழி சாலை ஏற்படுத்த புதன்கிழமை காலை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி அடிக்கல் நாட்டினாா். 6.30 கி.மீ தொலைவு வரை உள்ள இந்த 4 வழிபாதை ஏற்படுத்துவதால் போக்குவரத்து நெரிச்சல் இன்றி வாகனங்கள் விரைவாக செல்லமுடியும். இப்பணிகள் இன்னும் ஓராண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.