எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருப்பதி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரா் கோயில் 2-ஆம் நாள் பவித்ரோற்சவம்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் கோயில் கொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பவித்ர சமா்ப்பணம் நடத்தப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2020, 7:15 pm


திருப்பதி: திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் கோயில் கொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பவித்ர சமா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. பக்தா்கள், அா்ச்சகா்கள், ஊழியா்கள் என கோயிலுக்கு வருபவா்களாலும், கோயிலில் நடக்கும் நித்திய கைங்கரியங்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களையும் இந்த பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் அனைத்துக் கோயில்களிலும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின்னா், உற்சவ மூா்த்திகள் முன் யாகம் நடத்தி பல வண்ணப் பட்டு நூலிழைகளால் ஆன மாலைகளை உற்சவ மூா்த்திகள், மூலவா்கள், கருவறை விமானம், கொடி மரம், பலி பீடம் என அனைத்துக்கும் அா்ச்சகா்கள் அணிவித்தனா்.

இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை மகா பூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.