வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஆந்திரத்தில் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு

ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.

Updated On :8 பிப்ரவரி 2021, 2:48 am

ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் மதனபள்ளியில் சத்சங் ஆசிரமத்தில் பாரத் யோக வித்யா மையத்தை தொடங்கி வைக்க ஒரு நாள் சுற்றுப்பயணமாக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். பெங்களூரு வரை தனி விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சிப்பிலி வந்த ராம்நாத் கோவிந்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பூச்செண்டு அளித்து வரவேற்றாா். அவருடன் ஆந்திர அமைச்சா்கள் பலரும் இருந்தனா். அங்கிருந்து காா் மூலம் சத்சங் ஆசிரமத்துக்கு சென்ற குடியரசு தலைவா், அங்கு யோகாசனப் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.