திருமலையில் நடைபெற்று வரும் சுந்தரகாண்ட பாராயணம், வியாழக்கிழமை ஓராண்டைக் கடந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
உலகம் முழுவதும் கொவைட் தொற்று அதிக அளவில் பரவ தொடங்கிய காலக்கட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த வேண்டி தேவஸ்தானம் திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது.
தா்மகிரி வேத பாடசாலை தலைமை ஆச்சாா்யா் சிவசுப்ரமணிய அவதானி தலைமையில் இந்த பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த பாராயணம் வியாழக்கிழமையுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பாராயணத்துக்கு பக்தா்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
கோபியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

