சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. அதுபோலவே, தமிழகம் முழுவதும் 3,302 பதற்றம் நிறைந்த இடங்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.462 கோடி மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலை நடத்த ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் பணிகளுக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். இதுவரை 85 வயதுக்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Summary
Archana Patnaik reveals how many crores will be spent to hold Tamil Nadu Assembly elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8-ல் 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்!

வேட்பாளா்களின் குற்றப் பின்னணி: விளம்பரப்படுத்த தோ்தல் ஆணையம் உத்தரவு

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik

தமிழகத்தில் பிப்.23இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


