ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில், சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 8:33 am

DIN

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகும். 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலின் மலை மீது வேதகிரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

Story image

அடிவாரம் அருகே தாழக் கோயிலில் அருள்மிகு பக்தவசலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். வேதமலை ,பட்ச தீர்த்தம், கழுகுன்றம், சங்க தீர்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை உடைய இக்கோயிலில் சித்திரை மாதம் 11 நாள்கள் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும்.

Story image

இந்த ஆண்டு சித்திரைப்பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன்,கோயில் செயல் அலுவலர் புவியரசு, மேலாளர் விஜயன் மற்றும்  சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வேத மந்திரங்களுடன் சாமி கொடிமரம் அருகில் எழுத்தருள சித்திரைப் பெருவிழ்கொடியேற்றப்பட்டது.

Story image

பின்னர் சாமி புறப்பாடு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து  திருவிழாவின் முதல் நாள் உற்சவம் துவங்கியது. ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

முக்கியத் திருவிழாவாக 3 ஆம் நாள் உற்சவமான 63 நாயன்மார்கள் மலைவலமும், 7 ஆம் நாள் உற்சவமான தேர் திருவிழா ( பஞ்சரதம்) திருவிழாவும் நடைபெறுகிறது.

Story image

மலைக்கோயில் மூலவர் வேதகிரீஸ்வரருக்கும், தாழக் கோயில் அருள்மிகு பக்தவசலேஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைப்பெற்றதுடன், 4 மாட வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.