அசாமின் குவகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா சனிக்கிழமை தொடங்கியதையடுத்து அடுத்த மூன்று நாள்களுக்கு கோயில் நடை மூடப்பட்டுள்ளது.
51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா தேவி திருக்கோயில். அன்னையின் உடற்கூறுகளில் தலைப்பாகம் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம் என்றழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்தில் அம்புபாச்சி மேளா என்பது அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் மாதவிடாய் சுழற்சி காலத்தைக் கடக்கிற மூன்று நாள்களும் கோயிலின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அம்மனின் மாதவிடாய் சுழற்சி காலம் முடிவடைந்த பின்னர் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் காமாக்யா கோயிலில் குவிந்து வருகின்றனர்.
அதன்படி, கமாக்யா கோயில் இன்று காலை 8.43க்கு அடைக்கப்பட்டது. இதோடு ஜூன் 25-ம் தேதி இரவு 9.07க்கு அம்மனின் மாதவிடாய் சுழற்சி நிறைவடைகிறது. ஜூன் 26 அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், சம்பிரதாய பூஜைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
முதல்வர் ஹமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தளத்தில்..
அம்புபாச்சி மேளாவை முன்னிட்டு பக்தர்களை நான் வரவேற்கிறேன். இந்த மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
மேளாவை சமூகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை கம்ரூப் பெருநகர மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். காமாக்யா ரயில் நிலையத்தில் 5 ஆயிரம் பேரும், பாண்டு துறைமுகத்தில் 12 முதல் 15 ஆயிரம் பேர் தங்குவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விஐபி பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதான கோயிலுக்குச் செல்லும் சாலையில் அவசர பயன்பாட்டு வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
மேலும், குறிப்பிட்ட இடங்களில் கழிப்பறைகள், தெரு விளக்குகள், சுகாதார முகாம்கள் மற்றும் சாலைகளில் தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெனோபாஸ்: பெண்களே பேசத் தயங்குவதற்குக் காரணம்? செய்ய வேண்டியது என்ன?

எம்எல்ஏ, அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்! நிர்மல் குமார் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

அமைச்சர் நிர்மல் குமாருக்காக திருப்பரங்குன்றம் கோயில் நடை தாமதமாக அடைப்பு! உயர் நீதிமன்றம் கேள்வி

சபரிமலை ஐயப்பன் கோயில் மே 19 வரை நடை திறப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |





