மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!

சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா இன்று நடைபெற்றது.

News image
வேல் எடுக்கும் திருவிழா
Updated On :27 செப்டம்பர் 2024, 9:45 am

DIN

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு "அரோகரா' கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் மலை உச்சியில் உள்ளது காசிவிசுவநாதர் கோவில். இங்கு மலைமேல் குமரர் சன்னதி வளாகத்தில் உள்ள வற்றாத தீர்த்த குளம் தெய்வீக புலவர் நக்கீரருக்காக முருகப் பெருமான், வேல் கொண்டு மலையின் பாறையில் உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது.

இதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேல் பல்லக்கில் வைத்து, மலை உச்சியில் உள்ள தீர்த்த குளத்திற்கு மேளதாளங்கள் முழங்கிட எடுத்து செல்லப்பட்டது.

தொடர்ந்து, அங்கு வற்றாத தீர்த்த குளத்தில் மகா அபிஷேகமும், அதனைடுத்து குமரர் சன்னதியில் பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.

விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று "அரோகரா' கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்திட, பக்தர்களுக்கு கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயில் மலையை குடைந்து கருவறை அமைந்துள்ளதால் இங்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை. ஆனால் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்குத்தான் அனைத்து வகை அபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.