கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image

பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

Updated On :21 ஆகஸ்ட் 2025, 8:59 am

தஞ்சாவூர் அருகேயுள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்க கோவிலூர் பகுதியில் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று கடந்த 19 ஆம் தேதி கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று மேள, தாளங்களுடன் இடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க,ஆலயத்தின் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.