தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மார்கழி சிறப்பாக, ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன் பற்றிய தகவல்கள்.

News image

தாடாளன் கோயில்

Updated On :20 டிசம்பர் 2025, 7:00 am IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள திருவிக்கிரமநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் உற்சவர் தாடாளனை இந்த மார்கழியில் மட்டுமே தரிசிக்க முடியும். அதுவும் ஒரே ஒரு நாள் மட்டும்.

சீர்காழியில் அமைந்துள்ள அருள்மிகு திருவிக்கிரமநாராயணப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 28வது திருக்கோயிலாகும்.

கருவறைக்குள், இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறும், வலது பாதத்தை பூமியில் ஊன்றியும் காட்சி தருகிறார். மேலும் வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடது கையை மேலும் ஒரு அடி நிலம் எங்கே? என்று கேட்கும் வகையில் ஒரு விரலை மட்டும் தூக்கியபடியும் திரிவிக்கிரமர் எனப்படும் தாடாளன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இவரது வலது பாதம் அருகே ஒன்றரை அடி உயரத்தில் தவிட்டு தாடாளன்பெருமாள் (வாமணர் அவதாரம்) காட்சி தருகிறார். இக்கோயிலில் மூலவரின் வலது பாதத்தையும், அங்கிருக்கும் தவிட்டுதாடாளனையும் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே தரிசனம் செய்யமுடியும்.

இது மார்கழி மாதத்தின் மற்றுமொரு சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு தாடாளன் என்ற பெயரை ஆண்டாள் சூட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக, தாயார் லோகநாயகி அம்மன் தன்னுடைய மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கி நிற்கிறார். சுவாமி ஒரு பாதத்தில் நிற்பதால், அவருக்கு பாதம் வலிக்காமல் இருக்க அவரை மகாலட்சுமி தாங்குவதாக ஐதீகம்.

வைகுண்ட ஏகாதசி விழா அன்று, தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில், உற்சவர் தாடாளன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் வைத்து பெருமாளை சொர்க்கவாசல் அருகே எழுந்தருளச் செய்வர். அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்படும்.

பிறகு, தாடாளன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, திரளான பக்தர்கள் "கோவிந்தா,கோவிந்தா' என முழங்கியவாறு சொர்க்கவாசலை தரிசனம் செய்வர். அன்று ஒருநாள் மட்டுமே உற்சவர் தாடாளனையும் தரிசனம் செய்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.