திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பிறகு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும், காலை 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.

சித்திரை முதல் நாளையொட்டி சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடி தீர்த்தவாரி நடந்தது.
சித்திரை முதல் நாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு சிறப்புப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சித்திரை விசு கனி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு கனிகள் வைக்கப்பட்டிருந்ததை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
Summary
Thousands of devotees had darshan of the Lord in Tiruchendur on the occasion of the Chithirai Visukani Kanam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



