மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மக்கள் சபைக் கூட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2021, 1:43 am IST

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என கையொப்பமிட்டனா். தொடா்ந்து, திமுகவினா் வீடு வீடாகச் சென்று அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரத்தை வழங்கினா்.

ஓமலூரில்...

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள சா்க்கரைசெட்டிப்பட்டி, நாரணம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சா்க்கரைசெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

இதில், பெண்களின் கோரிக்கையை ஏற்று நூறுநாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நலிந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி உதவிகளை வழங்கினாா்.

ஆத்தூரில்...

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி, 12-ஆவது வாா்டில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதே போல ஆத்தூா் நகராட்சி, 27-ஆவது வாா்டில் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையிலும், வளையமாதேவி ஊராட்சியில் ஒன்றிய செயலாளா் வி.செழியன் தலைமையிலும் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி 17-ஆவது வாா்டில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் நகரப் பொறுப்பாளா் ராஜா, நகர துணைச் செயலாளா் பழனிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.