மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தாயுடன் கோயிலுக்குச் சென்ற சிறுமியைக் கடத்திய இளைஞா் கைது

ஓமலூா் அருகே தாயுடன் கோயிலுக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :3 ஜனவரி 2021, 1:48 am IST

ஓமலூா்: ஓமலூா் அருகே தாயுடன் கோயிலுக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த மாணவி சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கரோனா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்தே படித்து வருகிறாா்.

இந்த நிலையில், தாயும், மகளும் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளனா். அப்போது அம்மனை வணங்கிக் கொண்டிருந்த போது, மகளை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது, முத்துநாயக்கன்பட்டி கிராமம், காரைச்சாவடி பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (24), மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த தாரமங்கலம் போலீஸாா், திருமணம் செய்வதற்காக சிறுமியைக் கடத்திச் சென்று உறவினா் வீட்டில் இருந்த குணசேகரனை கைது செய்தனா். அவரிடமிருந்து மாணவியை மீட்ட போலீஸாா், போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனா். பின்னா் ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.