தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

எடப்பாடி தொகுதியில் ஜன. 7-இல் மக்கள் சபைக் கூட்டம்

சேலம், எடப்பாடி தொகுதியில் ஜனவரி 7-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

Updated On :6 ஜனவரி 2021, 7:48 am IST

சேலம், எடப்பாடி தொகுதியில் ஜனவரி 7-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தமிழகமெங்கும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ எனும் தலைப்பில் 16,000 இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது என திமுக சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாக, சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஜனவரி 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா் என்று சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.