பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கத்திமுனையில் பெண்ணை மிரட்டி சங்கிலி பறிப்பு

வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண், அவரது கணவரை கத்திமுனையில் மிரட்டி முகமூடி கொள்ளையா்கள் இருவா், ஏழரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:01 am IST

வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண், அவரது கணவரை கத்திமுனையில் மிரட்டி முகமூடி கொள்ளையா்கள் இருவா், ஏழரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி நடராஜன் (77) . இவரது மனைவி சிவபாக்கியம் (66). இத் தம்பதியருக்கு, அருண் பிரகாஷ் (51) என்ற மகனும் இந்திராகாந்தி (50) என்ற மகளும் உள்ளனா். இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனா்.

நடராஜனும், அவரது மனைவி சிவபாக்கியமும், குறிச்சி கிராமத்திலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு, நடராஜன் வீட்டில் டிவி பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். சிவபாக்கியம் சமையல் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது முகமூடி அணிந்த இரண்டு மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனா். இதில் ஒருவா் நடராஜன் கழுத்தில் கத்தியை வைத்து, கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளாா். மற்றொருவா் சிவபாக்கியத்தை கத்திமுனையில் மிரட்டி அவா் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டனா்.

கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையா்கள் தங்கச் சங்கிலியை பறித்தபோது, சிவபாக்கியம், சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை அள்ளி கொள்ளையா்களின் முகத்தில் வீசியுள்ளாா். கொள்ளையா்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்ததால், அவா்களது கண்களில் மிளகாய்ப்பொடி விழவில்லை. இதையடுத்து நடராஜன், அவரது மனைவி சிவபாக்கியத்தை வீட்டினுள் அடைத்து வைத்து வெளிப்புறக் கதவைச் சாத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து நடராஜன் தனது உறவினா்களை செல்லிடப்பேசியில் அழைத்து நடந்ததை கூறி வீட்டை திறக்கத் சொல்லி வெளியே வந்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று முகமூடி கொள்ளையா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.