பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து தில்லியில் சிஎன்ஜி விலையும் வெள்ளிக்கிழமை காலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு, மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.67-ஆகவும், டீசல் ரூ. ரூ. 95.25-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தில்லியில் சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 77.09 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிஎன்ஜி, ரூ. 79.09 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் மகாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனம் வியாழக்கிழமை சிஎன்ஜி எரிவாயு விலையை ரூ. 2 உயர்த்திய நிலையில், இன்று தில்லியில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் சிஎன்ஜி எரிவாயு விலை ஏற்றம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
Summary
Following petrol and diesel, CNG prices also rise!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்பு
விடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | விஜய் ஒரு ராஜதந்திரி | TVK | CM Vijay | Mdmk | Vaiko | Durai Vaiko |

லிங்கம் டிரைலர்!
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive




