குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தல்களுக்க்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறித்து...

News image

பெட்ரோல், டீசல் விலை - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:51 pm

மேற்கு வங்கத்தின் பேரவைத் தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்ததையடுத்து, இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என வதந்திகள் பரவின. 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்ததும் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று வதந்திகள் பரவின.

இந்த நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் செய்தியாளர்களுடன் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் சுஜாதா சர்மா பேசியதாவது, "எண்ணெய்த் தட்டுப்பாடு என மக்கள் பீதியுடன் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்க்கிறோம். மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எங்கும் எண்ணெய்ப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

மேலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எந்தத் திட்டமும் இல்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். பீதியுடன் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தேர்தல் காலம் முடிந்தது; பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. நீங்கள் பாருங்கள், ஏப். 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயரும்.

எரிபொருள் விலை குறைவாக இருந்தபோது, அதன் லாபத்தை மோடி அரசு தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டது. இப்போது எரிபொருள் விலை உயரும்போது, அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு மோடி அரசு மெளனமாக இருக்கிறது.

மலிவாக இருக்கும்போது அரசு கொள்ளையடிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது அதனை மக்கள் மீது சுமத்திவிடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Will Petrol and Diesel Prices Rise After the Assembly Elections?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.