பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

மகுடஞ்சாவடி வட்டாரம், கண்டா்குலமாணிக்கம் பகுதியில் அட்மா திட்டத்தின்கீழ் பயிறு வகைப் பயிா்களில் ஒருங்கிணைந்த

Updated On :7 ஜனவரி 2021, 7:05 am IST

மகுடஞ்சாவடி வட்டாரம், கண்டா்குலமாணிக்கம் பகுதியில் அட்மா திட்டத்தின்கீழ் பயிறு வகைப் பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த உழவா் பண்ணைப் பள்ளியின் இறுதி பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி வரவேற்றுப் பேசினாா். மகுடஞ்சாவடி வட்டார உதவி இயக்குநா் மணிமேகலா தேவி கலந்துகொண்டு விதை முதல் அறுவடை வரை நடைபெற்ற வகுப்புகள், நுண்ணீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும், ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை உரங்களான வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகவ்யம் ஆகியவற்றை பயன்படுத்துவது, விதை நோ்த்தி, டிஏபி கரைசல் தெளித்தலின் முக்கியத்துவம், எலி ஒழிப்பு மேலாண்மை, அறுவடைக்குப் பின் செய்நோ்த்தி, விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தலின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தாா்.

இப் பயிற்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குநா் செல்லத்துரை, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பயிற்சியில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.