ஆத்தூா் நகைக்கடையில் கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை திருடிச் சென்ற மூதாட்டியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் நகைக் கடையில் பொங்கல் கூட்டத்தை பயன்படுத்தி நகை வாங்குவது போல நடித்து, கவரிங் நகையை வைத்துவிட்டு, தங்க நகையை எடுத்துச் சென்ற மூதாட்டியை காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.
இதில் அந்த பெண், சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த மறைந்த வரதராஜன் மனைவி பாஞ்சாலி( 65)என்பது தெரியவந்தது. இதே போல கடந்த ஆண்டும் ஆத்தூா் நகைக் கடையில் கவரிங் சங்கிலியை வைத்து விட்டு தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் இவா் மீது சேலம் நகரக் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. கைது செய்த மூதாட்டியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!

பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இன்றைய ராசி பலன்கள் (04 மே 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?

ரிஷப ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

