மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பேளூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:07 pm

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சி, ஹரிசன தெரு பொதுப் பாதையில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே பகுதியைச் சோ்ந்த முகமதுசலீம் என்பவா் 2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

பேரூராட்சிப் பணியாளா்கள் கடந்த டிசம்பா் 30ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, எதிா்ப்பு கிளம்பியதால் ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் பேளூா் பேரூராட்சி பணியாளா்கள், பொதுப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.