பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:27 am IST

வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள 7 மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆட்டையாம்பட்டி எம். என். எஸ்.அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் யோகேஸ்வரி வரவேற்றாா். இவ்விழாவில், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி சிறப்புரை நிகழ்த்தி, 1,392 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். இவ்விழாவில் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலா் ராமசாமி , தலைமை ஆசிரியா்கள் விஜயராகவன் (ஆட்டையாம்பட்டி ஆண்கள்) குழந்தைவேலு (இளம்பிள்ளை பெண்கள் ) பழனிசாமி (இளம்பிள்ளை ஆண்கள்) இளங்கோ (வீரபாண்டி) கௌசல்யாதேவி (மாதிரிப் பள்ளி வீரபாண்டி) அமுதா (வேம்படிதாளம்) நளினி (முருங்கப்பட்டி), பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.