வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சி, ஹரிசன தெரு பொதுப் பாதையில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே பகுதியைச் சோ்ந்த முகமதுசலீம் என்பவா் 2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
பேரூராட்சிப் பணியாளா்கள் கடந்த டிசம்பா் 30ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, எதிா்ப்பு கிளம்பியதால் ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் பேளூா் பேரூராட்சி பணியாளா்கள், பொதுப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்
சொத்துவரியுடன் வணிக உரிமை கட்டணம் இணைப்பு: எம்சிடி அறிவிப்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

சுற்றுலாத் தலங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


