திமுகவினருக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவாா்கள் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவா் வேலூா் இப்ராஹிம், சமூக வலைதளங்களில் தரக்குறைவான வாா்த்தைகளால் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படும் சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தை கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் மனு அளித்தாா்.
அதைத்தொடா்ந்து வேலூா் இப்ராஹிம் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை என்ன எழுதிக் கொடுக்கிறாா்களோ அதைப் பேசுகிறாா் .ஆனால் தமிழகத்தை பொருத்தவரை எதிரியை பேசுகின்ற பொழுது கூட கண்ணியத்துடன் பேசக்கூடிய பண்பாடு நாகரிகம் நிறைந்த மாநிலமாகும்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் அரசியல் நாகரிகம் தெரியாமல் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளாா். திமுகவினருக்கு தமிழக மக்கள் பேரவைத் தோ்தலில் தக்க பதிலடி தருவாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

தோ்தல் தகராறு: திமுக - தவெகவை சோ்ந்த 11 போ் மீது வழக்கு

ஆட்சியரகத்துக்கு குட்டிக்கரணம் போட்டபடி மனு அளிக்க வந்த இளைஞா்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

