ராணி வேலுநாச்சியாரின் 291-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சூரக்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயா்களிடம் போராடி வெற்றி பெற்ற வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினம் (ஜன.3) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலுநாச்சியாரின் 291-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கை அருகே சூரக்குளத்தில் ராணி வேலுநாச்சியாா் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சா் க.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், சிவகங்கை வட்டாட்சியா் மைலாவதி, சிவகங்கை மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினா் பி. ஆா். செந்தில்நாதன், சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பொன்.மணிபாஸ்கரன் உள்பட பொதுமக்கள், பல்வேறு அமைப்பினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் லெ. பாண்டி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) நா.விஜயகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய காவிரி நடுவர் மன்றம் ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்

காக்கிநாடா குழந்தை மாயம்! பொம்மைக்குள் கறித் துண்டுகளை வைத்தும் சோதித்த போலீஸ்!
தமிழக அரசியல் திரைக்கதையைப் புரட்டிப்போட்ட விஜய் சர்க்கார்!

நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




