கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் வரை இயக்கப்பட்டு வந்த 23பி வழித்தடம் கொண்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, 23சி பஸ்களில் சிலவற்றை கட் சர்வீசாக கோட்டூர்புரம் வழியாக இயக்க வேண்டும்.