கிண்டி கத்தில்பாரா பகுதியில் சாலையோரத்தில் போடப்பட்ட கிரானைட் கற்களும், சிமெண்ட் சிலாப்புகளும் பல காலமாக அகற்றப்படாமல் உள்ளது. இதே நிலை அண்ணாசாலையின் நோக்கிய சாலையிலும் கற்களும் காணப்படுகின்றன. கற்களும், சிமெண்ட் சிலாப்புகளும் சாலையில் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அச்சுறுத்தல் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.