தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது. இந்த வழியாய் செல்வதால் 55 நிமிடங்களுக்குள் ஆவடி செல்ல முடிகிறது.
இதுபோலே, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், அய்யப்பன்தாங்கல் வரை வெளி வட்டப் பாதை வழியாக புதிய வழித்தட பேருந்துகளை அறிமுகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகர்ப் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.