புதிய பேருந்துகள் இயக்கப்படுமா?

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது.
Published on
Updated on
1 min read

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது. இந்த வழியாய் செல்வதால் 55 நிமிடங்களுக்குள் ஆவடி செல்ல முடிகிறது.

இதுபோலே, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், அய்யப்பன்தாங்கல் வரை வெளி வட்டப் பாதை வழியாக புதிய வழித்தட பேருந்துகளை அறிமுகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகர்ப் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com