ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக நீரிழிவு நோய் தினம் பற்றிய பிரச்சாரங்களை சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் மேற்கொள்கிறது. இந்த அமைப்பானது தனது நடவடிக்கைகளினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீரிழவு நோய் குறித்து வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் உதவுகிறது.
உலகமெங்கும் நீரிழிவு நோய் மூலம் உண்டாகியிருக்கும் அபாயத்தை உணர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து, 1991-ஆம் ஆண்டிலிருந்து, உலக நீரிழவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடி வருகிறது.