கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை மொழிபெயர்த்த புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஜெரோம் 'மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர்' என புகழப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1991 ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் உலகளாவிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.